சென்னை:
கொரோனா தொற்று கடந்த ஒன்றரை வருடங்களாக உலகெங்கும் ஆட்டி படைத்தது வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா தொற்று தொடர்ந்து 2,3 4 வைத்து அலை என உலகமெங்கும் பரவி வருகிறது.
தமிழகத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அன்றாட வாழ்க்கையை மக்கள் வாழ முடியாது தவித்தது வருகின்றனர். இதனால் மிகப் பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி போடுவதையும், முக கவசம் அணிந்து நடமாடுவதையும் இன்னும் அதிக படுத்த வேண்டும் என அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உறுதிமொழி ஏற்றார்.
மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு பதாகைகளை முதலமைச்சர் பார்வையிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.