இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகளவில் பரவி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் இந்நோய்க்கு,493 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் அதிபட்சமாக கோவையில் 3,735 போருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் சென்னையில் அதிகமாக இருந்து கொரோனா தொற்று தற்போது குறைய தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் கொரோனா குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.