தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. அதில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது.
இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதனால் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இருவருடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுப்பதற்காக எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நோயின் தீவிரம் பரவும் தன்மை என்ன என்று அதில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.