தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணிச் செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நேற்று 17,122 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், ஒரே நாளில் 686 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இதனையடுத்து திமுக எம்.பி. கனிமொழிக்கு கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், மீண்டும் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.