கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் தமிழக அரசு இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது இந்த நிலையில் தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அனைத்து மத தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மோஷக் ராஜா தமிழ்நாடு சிறுபான்மை பிரிவு மற்றும் அரசியல் பிரிவு தலைவர், “கடந்த ஆண்டு கொரோனா வந்த போது அரசுக்கு முழு ஒத்துழைப்பு கெடுத்தோம் .அதோ போல் இந்த ஆண்டு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றும் ஒவ்வொரு உயிரும் மிக முக்கியம் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம் என்றும், பிரார்த்தனை செய்வதற்கு ஞாயிற்று கிழமை மட்டும் 2 மணி நேரம் கொடுக்க வேண்டும், அது காலை 1 மணி நேரம் அல்லது மாலை 1 மணி நேரம் கொடுக்க வேண்டும்.
இதனால் மக்கள் வழிபாடு செய்வதற்கு போதுமானதாக இருக்கும் அரசு அறிவித்த எல்லா பாதுகாப்பு நடைமுறைகளான முகக்கவசம் , மாஸ்க் ,தெர்மல் மீட்டர் உள்ளிட்டவைகளை வைப்போம் 50% மக்களுடன் வழிபாடு செய்வோம் என்று தெரிவித்தார். இது தொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இரண்டு நாட்களுக்குள் நல்ல தகவல் கூறுவார் என தெரிவித்தார்கள்.