வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சியின் வேட்பாளர்கள், முகவர்களுக்கு தடுப்பூசி மற்றும் RT PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது, வரும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் பதிவான வாக்குகள் 4 மையங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் சார்பில் அவர்களது முகவர்கள் வாக்கு எண்ணிக்கையின் போது பணியில் ஈடுபட உள்ளனர். கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இது போன்ற பணிகளில் ஈடுபடும் அனைவரும் கொரோனா தடுப்பூசி அல்லது RT PCR பரிசோதனை மூலம் நெகட்டிவ் என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து வேட்பாளர்களின் முகவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி மற்றும் RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.