தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களில் மஹாரஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மற்றும் இறப்பு விகிதங்கள் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் பொருட்டு மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு உயர்மட்ட குழுவை அனுப்புவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மகாராஷ்ட்ரா, கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கொரோனாவுக்கு எதிரான பொது சுகாதார நடவடிக்கைகளில், அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் உயர்மட்ட குழுக்களை மத்திய அரசு அனுப்புகிறது” எனத் தெரிவித்துள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.