சென்னை:-
குருப் 1 முதல்நிலை தேர்வு முடிவை ரத்து செய்ய கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூலை 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப்-1 முதல் நிலைத் தேர்வு கடந்த ஜனவரி 3ஆம் தேதியன்று நடைபெற்றது.
சுமார் 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் இத்தேர்வில் பங்கேற்ற இந்த தேர்வு முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகளில் மாற்றம் வேண்டும் எனவும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்து பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவை ரத்து செய்வது குறித்த டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கை ஜூலை 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.