தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:
கொரோனா தொற்று இந்திய அளவில் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது என புள்ளிவிபரங்களை தெரிவிக்கின்றன. இது கொரோனா தொற்றின் 3 ஆம் அலையின் தொடக்கமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறனர்.
கொரோனா தொற்றின் 3-ம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர் என்ற எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு கொரோனா தொற்றின் 3-ம் அலை குறித்து கண்காணிக்க 13 பேர்கொண்ட பணி குழு அமைத்துள்ளது.
இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு செயல்ப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.