கடலூர்:-
கடலூரில் மதுபானங்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து மது வாங்க முயன்ற 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு காரணமாக 40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த மதுபானக்கடைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் ஊரடங்கு முழுவதுமாக முடியும்வரை மதுபான கடைகளை திறக்கக் கூடாது என்ற உத்தரவை பிறப்பித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நேற்று உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து மதுபான கடைகளை திறப்பதற்கு உத்தரவிட்டது. இன்னிலையில் மதுபான கடைகளில் மது பிரியர்கள் மது வாங்க ஏழு வண்ணங்களில் டோக்கன்களை அச்சிட்டது டாஸ்மாக் நிர்வாகம்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் பேருந்து நிலையம் அருகே போலி மதுபான டோக்கன்களை ஜெராக்ஸ் கடையில் கலர் ஜெராக்ஸ் எடுத்து வந்து மதுபானம் வாங்க முயன்ற 17 நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.