தமிழகம்

மதுபான டோக்கங்களை கலர் ஜெராக்ஸ் எடுத்த மதுப்பிரியர்கள் கைது.. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடலூர்:-

கடலூரில் மதுபானங்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து மது வாங்க முயன்ற 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு காரணமாக 40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த மதுபானக்கடைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் ஊரடங்கு முழுவதுமாக முடியும்வரை மதுபான கடைகளை திறக்கக் கூடாது என்ற உத்தரவை பிறப்பித்தது.

ALSO READ  சென்னை உங்களை கண்காணிக்கிறது…..CCTV அதிகமுள்ள பெருநகரங்களின் பட்டியலில் சென்னைக்கு முதலிடம்:

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நேற்று உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து மதுபான கடைகளை திறப்பதற்கு உத்தரவிட்டது. இன்னிலையில் மதுபான கடைகளில் மது பிரியர்கள் மது வாங்க ஏழு வண்ணங்களில் டோக்கன்களை அச்சிட்டது டாஸ்மாக் நிர்வாகம்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் பேருந்து நிலையம் அருகே போலி மதுபான  டோக்கன்களை ஜெராக்ஸ் கடையில் கலர் ஜெராக்ஸ் எடுத்து வந்து மதுபானம் வாங்க முயன்ற  17 நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

ALSO READ  தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க தடை இல்லை- உச்சநீதிமன்றம் அதிரடி..


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மோசடி- தலைமறைவாக இருந்த எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் கைது!

naveen santhakumar

தொடர் ATM கொள்ளைகளில் கைவரிசை காட்டியவர்களில் மேலும் ஒரு கொள்ளையன் கைது :

Shobika

காப்பாத்துங்க மோடி.. காப்பாத்துங்க முதல்வரே… கைதாவதற்கு முன் கதறிய மீரா மிதுன்..!

naveen santhakumar