சென்னை
வடக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது வரும் 18ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
அதுபோன்று தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில், புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று ) உருவாக வாய்ப்புள்ளதென்றும் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
அந்தமான் பகுதியில் உள்ள காற்றழுத்தமும், அரபிக் கடல் பகுதியில் இருந்து வரும் காற்றழுத்தமும் இணையும் இடத்தை பொறுத்து தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கண்காணித்து வருவதாக குறிப்பிட்டார்.
சென்னை மற்றும் வட மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17 மற்றும் 18ம் தேதிகளில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
இன்று ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கரூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கன மழை பெய்யும்.என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.