வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை 268 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்றும் நவ.1 முதல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதன் காரணமாக சமையல் கேஸ் சிலிண்டரின் விலை இன்று முதல் மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 268 உயர்ந்து ரூபாய் 2,133 என விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் இல்லத்தரசிகள் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டருக்கான விலை ரூ.915.50க்கு விற்பனையாகுகிறது.
எனினும் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக உணவு விடுதிகளில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் வாய்ப்புள்ளது.