தமிழகம்

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 கோடி மதிப்பில் நிவாரண பொருட்கள்- விஜயகாந்த்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக சார்பில் 5 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் மே 3ம் தேதிக்கு பின் வழங்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்திலும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரடங்கு,  சமூக இடைவேளி, இவையெல்லாம் நீங்கிய பிறகு தேமுதிக சார்பில்  மாவட்ட வாரியாக நகரம், ஒன்றியம், பேரூர் கழகம், ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள்,  மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை நேரடியாக செய்ய வேண்டும். உண்ண உணவு, இருக்க இருப்பிடம், உடுத்த உடை, மருத்துவம், வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தில் சிக்கி உள்ளவர்களுக்கு பண உதவி போன்றவற்றை யாருக்கு என்ன தேவையிருக்கிறது என்பதை குறிப்பு அறிந்து, மக்களுக்கு நேரடியாக சென்றடைய நாம் தாயராக இருப்போம். கொரோனா ஊரடங்கு விலகிய பிறகு மே3ம் தேதிக்கு பின்னர்  கழக நிர்வாகிகள் ஒவ்வொரும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க தயாராக இருங்கள் என கேட்டு கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.


Share
ALSO READ  பட்டாசு ஆலையில் தீ விபத்து…. 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு…..
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அன்று ஜெயலலிதா…. இன்று குஷ்புவா????

naveen santhakumar

உள்ளாட்சி தேர்தல்: நாளை கடைசி நாள்!

News Editor

கொரோனாவால் குடிமகன்களுக்கு ஒரு நற்செய்தி….

naveen santhakumar