திருச்சி மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில்,பிளஸ் 2 பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும். கொரோனா தொற்று தமிழக மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. இந்த பரவலை கருத்தில் கொண்டுதான் உரிய முடிவு எடுக்கப்படும்.
பள்ளி மாணவர்களின் எதிர்காலம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு உடல் நலமும் முக்கியம். வகுப்பறைக்கு வந்தே மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள். ஆன்லைனில் தேர்வு நடத்தப்படாது.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எல்லாரும் சிபிஎஸ்இ பள்ளியை மனதில் வைத்துப் பேசினார்கள். தமிழகம் மட்டுமே ஸ்டேட் போர்டு மாணவர்களையும் மனதில் வைத்து பேசி உள்ளோம். தேர்வு தேதி மாநில அரசு முடிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம் எனக் கூறியுள்ளார்.