கொரோனா முதல் அலையில் நாட்டின் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு என அனைத்தும் பாதிக்கப்பட்டு மக்களின் நிதிநிலை மிகவும் மோசமான நிலைக்குப் தள்ளப்பட்டது.
கொரோனா இரண்டாம் அலை தற்போது தணிந்து வருகிறது. இதன் மூலம் நம் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்ப மிகவும் முக்கிய காரணமாக இருக்கப்போவது விழாக்கால விற்பனை தான்.
கூகிள் – ரிலையன்ஸ் உருவாக்கிய 4ஜி ஸ்மார்ட்போன் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் அறிமுகம் செய்ய உள்ளார்கள்.
சந்தை வல்லுனர்கள் கணிக்கப்பட்டதை விடவும் மிகவும் சிறப்பான வர்த்தகம் பதிவு செய்யப்பட்ட காரணத்தால், பண்டிகை கால விற்பனை மிகவும் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ஸ்மார்ட் போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் முன் கூட்டியே தயாராகி வருகின்றன.
கொரோனா 2வது அலையில் அதிகளவிலான வர்த்தக பாதிப்பு இல்லாத காரணத்தால் மக்களின் வேலைவாய்ப்பு அளவீடும் பாதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மக்கள் கையில் போதுமான பணம் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. இதன் மூலம் கடந்த வருடத்தை விடவும் இந்த வருடம் பண்டிகை கால விற்பனை மிகவும் சிறப்பாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
எனவே ஜூலை மாதத்தில் இருந்து எல்ஜி, சாம்சங், காட்ரிஜ், ஹேயர், விவோ, ரியல்மீ, ஆப்பிள், பேனாசோனிக், சியோமி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் உற்பத்தியைத் துவக்கவுள்ளது.