தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
ஈரோடு மாவட்டத்தில் நாளை, 13ம் தேதி முதல், ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் ஹெல்மெட் அணியாதவர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட எஸ்பி சசிமோகன் கூறியதாவது,
தற்போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனாலும், 75 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாமல்தான் செல்கின்றனர்.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் வரும் 13ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படுவதுடன், வாகனத்தை பறிமுதல் செய்யவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என, எஸ்பி சசிமோகன் தெரிவித்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.