தமிழகம்

அதிர்ச்சி……அமைச்சர் துரைக்கண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருநெல்வேலி:

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைக்கண்ணுக்கு நெல்லை சேர்ந்த அதிமுக நிர்வாகி கண்ணீர் அஞ்சலி போஸ்டரை முகநூலில் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக்டோபர் 13ம் தேதி கொரோனா தாக்கம் மற்றும் தீவிர மூச்சுத்திணறல் காரணமாக வேளாண் துறை அமைச்சர் துரைகண்ணு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இணைநோய்கள் உள்ளதாகவும், சமீபத்திய சிடி ஸ்கேன் படத்தில் அவரது நுரையீரலில் 90% சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் மருத்துவமனையின் அறிக்கை தெரிவித்தது.

ALSO READ  கும்பகோணம் பள்ளி தீ விபத்து- 17ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தீவிர சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைக்கண்ணுக்கு நெல்லையைச் சேர்ந்த சரவணன் என்ற அந்த நபர் தனது முகநூல் பக்கத்தில் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வெளியிட்டிருந்தார். சில மணி நேரங்களில் அந்த போஸ்டர் நீக்கப்பட்டது. தவறுதலாக தெரியாமல் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பதிவிட்டுவிட்டதாகவும் பின்னர் உடனடியாக அதனை நீக்கிவிட்டதாகவும் சரவணன் தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாயின்ட் ஆப் சேல் கருவி பழுது- மக்கள் தவிப்பு..!

naveen santhakumar

அப்படி என்ன சரக்குணே அடிச்ச ..? போதையில் தண்டவாளத்தில் தூங்கிய நபர்

News Editor

செம்பரம்பாக்கம் ஏரி 20 அடியை தாண்டியது…தீவிர கண்காணிப்பு…

naveen santhakumar