நாமக்கல்:
தமிழக நாடு அரசின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நேற்று வெளியிட்டார். வெள்ளை அறிக்கையில் தற்போது தமிழக அரசுக்கு, 5.70 லட்சம் கோடி ரூபாய் கடன்சுமை ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2 லட்சத்து, 63 ஆயிரத்து, 976 ரூபாய் கடன் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டைமேட்டை சேர்ந்த இந்த தொகையை காந்தியாவதி ரமேஷ் காசோலை மூலம் 2 லட்சத்து, 63 ஆயிரத்து, 976 ரூபாய் கடனை செலுத்த இன்று நாமக்கல் வருவாய் அலுவலகம் வந்தார்.
தமிழ்நாடு நிதியமைச்சர் அறிவித்தபடி எனது குடும்பத்துக்கான பங்கை, முதல் நபராக, செலுத்த வருவாய் அலுவலகம் வந்தேன். எனது காசோலையை வருவாய் அலுவலர் வாங்க மறுத்ததால் உயர் அதிகாரிகளிடம் காசோலையை வழங்க போவதாக கூறியதைத் தொடர்ந்து அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.