விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்தவர் பெண் காவலர் கனிமுத்து. கடந்த 10 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் விடுமுறையில் இருந்தார். இந்நிலையில் மூச்சு திணறல் அதிகமாகி விருதுநகர் காவலர் குடியிருப்பு அருகே உள்ள அவரது வீட்டில் மரணமடைந்துள்ளார்.
பெண் காவலருக்கு கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் 11 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தனது தகப்பனார் ஆதரவுடன் இருந்து வந்த நிலையில் இன்று காலை மூச்சு திணறல் அதிகமாகி விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மூச்சுத்திணறல் பிரச்சினை இருந்ததால் அதற்கு மருத்துவம் பார்த்து மாத்திரை உட்கொண்டு வந்ததால் கொரோனா பரிசோதனை எடுக்காமல் இருந்துள்ளார்.அனைவரிடமும் அன்பாக பழகக் கூடிய பெண் காவலர் கனிமுத்து உயிரிழந்த சம்பவத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.