பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் உட்பட 10 உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அலுவலர்களுக்கான நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்த போது
அவர், “தமிழ்நாட்டில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை வேகமாக செயல்படுத்த கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றும் இந்தத் திட்டம் மழலையரின் கல்வித் திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது என்றும் வரும் 2025ஆம் ஆண்டில் கல்வியில் தமிழ்நாடு இந்திய அளவில் முக்கிய இடத்தை வகிக்கும் என்றும் கூறினார்.
மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் உட்பட 10 உபகரணங்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் எனவும் அதற்கான கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.