சென்னை
அரசு நகர்ப்புற பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயண திட்டத்தால் ஆட்டோ ஓட்டுனர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் பாதிப்படைந்த ஆட்டோ ஓட்டுனர்கள் இலவச பேருந்து சலுகை திட்டத்தை மறுபரிசீலனை செய்ய ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தி. மு. க ஆட்சி அமைந்தவுடன் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. திமுக ஆட்சி அமைந்தவுடன் நகரப் புறங்களில் செல்லும் பேருந்துகளில் பெண்கள் அனைவரும் பயணச்சீட்டு வாங்காமல் இலவசமாக செல்லலாம் என்ற வாக்குறுதியை அமுல் படுத்தியது.
எனவே தமிழகத்தில் உள்ள நகர்புற அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். பெண்கள் அனைவரும் எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருந்து அரசு பேருந்துகளில் இலவசப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் ஆட்டோக்களில் பெண்கள் பயணம் செய்வது மிகவும் குறைந்துவிட்டது. இதனால் போதிய வருமானம் இல்லாததால் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
எனவே பாதிப்படைந்த ஆட்டோ ஓட்டுனர்கள் இலவச பேருந்து சலுகை திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.