தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுப்பதற்கு மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்திருந்தது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை.
இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என பாலாஜி ராம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
எனவே தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.