தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் மதிப்பை அடிப்படையாக வைத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் தீர்மானிக்கின்றன. அந்த வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்படுகிறது.
ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மட்டும் மாதத்தில் முதல் மற்றும் பிற்பாதியில் மாற்றியமைக்கப்படும். இதனடிப்படையில் பிப்ரவரி மாதத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை மூன்றாவது முறையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்து 810 ரூபாயிலிருந்து 835 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் மட்டும் சிலிண்டர் 100 ரூபாய் விலை உயர்ந்த நிலையில், மார்ச் மாதம் தொடக்கத்தில் 25 ரூபாய் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.