தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மாடித்தோட்டம் அமைக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு அதனை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது பெரும்பாலானவர்கள் தங்களது வீட்டில் மாடித்தோட்டம் அமைத்து வருகிறார்கள். இவ்வாறு மாடித்தோட்டம் அமைப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு சார்பாகவும் மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் சென்னை கிண்டியில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகம் மையம் சார்பில் அதன் அலுவலகத்தில் 25ஆம் தேதி வீட்டுத்தோட்டம் குறித்தும், 26 ஆம் தேதி சிறுதானிய உணவுகள் குறித்தும் தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படுகின்றன.
திணை அரிசி பாயசம், திணை உருண்டை, சிறுதானிய அடை, பணிவரகு உப்புமா ஆகியவை கற்றுத்தரப்படும். இது குறித்து தெரிந்துகொள்ள 044-29530048 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.