தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை.
தமிழ்நாட்டில் பரவி வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பின் தீவிரம் குறைந்தவுடன் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என அண்மையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 12 வகுப்பு மாணவர்களுக்கு அலகு தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, வாட்ஸ் அப் அப்ளிகேஷன் மூலம் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும். முதலில் மாணவ மாணவிகளுக்கு தனிப்பட்ட வாட்சப் குழுவைத் தொடங்கி அதில் அலகு தேர்வுக்கான வினாத்தாளை அனுப்ப வேண்டும்.
அதற்கு மாணவர்கள் விடை எழுதி மாணவரின் பெயர், தேர்வு எண் உள்ளிட்டவைகளை கட்டாயம் எழுத வேண்டும். பின்னர் அந்த விடைத்தாளை வ்தத்ஸ் அப் குழு மூலம் அனுப்பி வைக்க வேண்டும். ஆசிரியர்கள் அதனை திருத்தி மதிப்பெண் வழங்க வேண்டும். எனக் கூறப்பட்டுள்ளது.