தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மையில் திமுக வெற்றிபெற்றது. அதனையடுத்து நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக மு.க ஸ்டாலின் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனையடுத்து இன்று காலை 10.30 மணியளவில் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்தார்.
இந்நிலையில், தற்போது ஸ்டாலினை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநரின் செயலாளர் மு.க. ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.