மாணவி ஸ்ரீமதி மரண விவகாரத்தில் மவுனமாக இருப்பதன் மர்மம் என்ன? என பாஜக தலைவர் அண்ணாமலையை தமிழ காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார்.
கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவிக்காதது ஏன் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பிய நிலையில் இது தொடர்பாக திருவண்ணாமலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்த போது,
ஏன் கனியாமூர் பள்ளி குழந்தையின் மரணத்திற்கு மட்டும் அவர்கள் கருத்து சொல்லவில்லை. அல்லது கண்டனம் தெரிவிக்கவில்லை. முறையான நீதி விசாரணை வேண்டும் என்று கேட்கவில்லை. எதற்காக நீதிமன்றம் அவர்கள் செல்லவில்லை. கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் ஆர்வம் காட்டாததன் மர்மம் என்ன? எதற்காக பாஜக அவ்வாறு நடந்து கொள்கிறார்கள்? எதற்காக ஆர்.எஸ். எஸ் மவுனமாக இருக்கிறார்கள்? என்பதை அறிய தமிழ்நாடு காங்கிரஸ் விரும்புகிறது என தெரிவித்துள்ளார்.