தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
இனி ஒவ்வொரு வியாழக்கிழமையும், பூஸ்டர் டோஸ் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் 60 வயது மேற்பட்டோருக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை வீடு தேடி சென்று செலுத்தும் திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழ்நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி இதுவரை 92 ஆயிரத்து 522 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், இனி ஒவ்வொரு வியாழக்கிழமையும், பூஸ்டர் டோஸ் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். ஜனவரி இறுதிக்குள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியுடையவர்கள் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.