தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுப்பு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கனமழை எதிரொலியால் சென்னை விமான நிலையத்தில் மாலை 6 மணி வரை விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Flight arrivals suspended in Chennai due to rains | Deccan Herald

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் 4 மணி வரை கனமழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் பலத்த காற்று வீசுவதால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னையில் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ  "எத்தனை உயிர்கள், எத்தனை துயரம்" ஜோதிமணி எம்.பி கருத்து !

மேலும், சென்னை விமான நிலையத்தில் மாலை 6 மணி வரை விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் டெல்லி, கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த 11 விமானங்கள் பெங்களூர் மற்றும் ஹைதராபாத்திற்கு திருப்பி விடப்பட்டன. திருச்சி, மதுரை, பெங்களுருவில் இருந்து வந்த விமானங்களும் திருப்பி விடப்பட்டன.

ALSO READ  சாத்தான்குளம் மரணம்: ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினி ஆறுதல்… 

அதேசமயம் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் வழக்கம் போல் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் – முதலவர் மு.க ஸ்டாலின்.

Admin

துவக்கப் பள்ளிகள் மற்றும் நடு நிலை பள்ளிகள் திறப்பது குறித்து செப்.,8க்கு பின்பு முடிவு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

News Editor

விஜய் என் தம்பி-சீமான் அதிரடி:

naveen santhakumar