கனமழை எதிரொலியால் சென்னை விமான நிலையத்தில் மாலை 6 மணி வரை விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் 4 மணி வரை கனமழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் பலத்த காற்று வீசுவதால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னையில் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சென்னை விமான நிலையத்தில் மாலை 6 மணி வரை விமானங்கள் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் டெல்லி, கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த 11 விமானங்கள் பெங்களூர் மற்றும் ஹைதராபாத்திற்கு திருப்பி விடப்பட்டன. திருச்சி, மதுரை, பெங்களுருவில் இருந்து வந்த விமானங்களும் திருப்பி விடப்பட்டன.
அதேசமயம் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் வழக்கம் போல் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.