கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாளை திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தெற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்றும், இது மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கரையை நோக்கி நகரக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும் அது அதே இடத்தில் நகராமல் நிலை கொண்டு இருப்பதால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஆகிறது. இதன் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அம்மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், கனமழை காரணமாக அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ளவும் கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.