9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில், முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் உட்பட துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையை எவ்வாறு மேற்கொள்வது, அதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்கப்பட்டது.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்முடி,தமிழகத்தில் உள்ள 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
பெரியார்,காமராஜ், அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்ற முறைகேடு புகார் தொடர்பாக ஐ.ஏ.ஸ் அதிகாரி தலைமையில் முறையான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.மேலும், தமிழ்நாடு முதலமைச்சருடன் ஆலோசனைக்கு பிறகே பொறியியல் கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கை குறித்து முடிவேடுக்கப்படும் என தெரிவித்தார்.
அதேபோல,அண்ணா பல்கலை கழகத்தில் 8 விருப்ப பாடத்திற்கு கூடுதலாக தமிழ் 9 வது பாடமாக இந்த நடப்பு கல்வி ஆண்டு முதல் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.பொறியல் கல்லூரி தேர்வுகளில் ஒரு பாடத்தில் மாணவர்கள் தோல்வி அடைந்தால் 4 பாடத்திற்கான தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்று என்பதிலிருந்து தோல்வி அடைந்த ஒரு பாடத்திற்கு மட்டுமே தேர்வு கட்டணம் செலுத்தினால் போதும் என தெரிவித்தார்.