சென்னை:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் அவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதனையடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைக்குப்பின்னர் வீடு திரும்பினார்.
இந்நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 27-ம் தேதி மீண்டும் ராமகோபாலன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கடந்த 28-ம் தேதி வெளியான பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி ராமகோபாலன் சென்னையில் காலமானார்.ராமகோபாலன் மறைவிற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.