தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கோவை ரயில் நிலையம் அருகே வாடகை கால்டாக்ஸி ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. இதில், பைசல் என்பவர் கால்டாக்ஸி நிறுத்தி வைத்திருந்தார். அங்கு இந்து முன்னணி நகர செயலாளர் சூர்யா என்பவரும் டாக்ஸியை நிறுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில், இருவருக்கும் இடையே வாடகை எடுப்பது தொடர்பாக வாக்குவாதம் எழுந்த நிலையில் ஆத்திரமடைந்த சூர்யா பைசலை கத்தியால் குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்த ஓட்டுநர் பைசல் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை கத்தியால் குத்திய சூர்யாவை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.