சென்னை:
கடந்த 13ஆம் தேதி மூச்சு திணறலால் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர் துரைக்கண்ணு விழுப்புரத்தில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இன்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் தமிழக அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு எக்மோ கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சரின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சற்றுமுன் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், வெண்டிலட்டர் எக்மோ சிறப்பு மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பில் அமைச்சர் துறை கண் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், அமைச்சருக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் நுரையீரல் 90% பாதிப்படைந்து உள்ளதால் அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் அந்த மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.