கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதற்கு காரணமாக இந்த கள்ளக்காதல் உள்ளது. கள்ளக்காதலால் ஒருவரை ஒருவர் கொலை செய்யும் அளவிற்கு கூட சென்று விடுகின்றனர். அந்த வகையில் கெங்கவல்லி அருகே ஒரு சம்பவம் நடந்துள்ளது.
நடுவலூர் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் பிரியா தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தை உள்ளது. ஆனால் ப்ரியாவுக்கு அந்த பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான சின்ன துரையுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இதனை அறிந்த கணவன் காவல் நிலையத்தில் மனைவி மீது புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை விசாரித்த காவல்துறை யினர் இருவரையும் கண்டித்து சேர்ந்து வாழுமாறு அறிவுரையை கொடுத்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் வேலை முடிந்து பிரகாஷ் வீட்டிற்கு திரும்பிய போது பிரியா வீட்டில் இல்லை. இதனால் சந்தேகமடைந்த பிரகாஷ் பிரியாவின் தாய் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.அங்கும் இல்லாததால் சின்னத்திரையின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த பிரகாஷ் அரிவாளால் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்து சம்பவத்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.