தமிழகம்

நான் இறந்து விட்டேன்- நித்தி பகீர் ஸ்டேட்மண்ட்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சர்ச்சை என்றால் நித்யானந்தா என்று சமீபத்தில் மாற்றியுள்ளார் சாமியார் நித்தியானந்தா.

உலகின் ஏதோ ஒரு மூலையில் தலைமறைவாக இருந்து கொண்டு நித்தம் நித்தம் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக இருக்கிறார் நித்தி. தினம் எதையாவது பேசி புது புது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது ஒருவீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நித்தி தற்போது வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கூறியிருப்பதாவது:-

20 ஆண்டு கால போராட்டத்துக்கு பிறகு கைலாசாவை கட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது .

வாடிகனைப் போல இந்து மதத்துக்கு என்று ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால் அதுகுறித்து வேறு எந்த தகவல்களையும் தற்போது தரப்போவது இல்லை.

ALSO READ  இ-பாஸ், இ-பதிவு தேவையில்லை- தமிழக அரசு

ஒரு சில நாடுகளுடன் தூதரக உறவுகளும் தொடங்கிவிட்டது. என்னுடைய மரணத் துக்குப் பிறகு எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்துவிட்டேன்.

தமிழகத்துக்கும் எனக்கும் இனி எந்தத் தொடர்பும் இல்லை. நான் இனிமேல் தமிழகத்துக்கு வரப்போவதும் இல்லை. தமிழக ஊடகங்களை பொறுத்தவரை நான் இறந்துவிட்டேன்.

ALSO READ  அவ்ளோ சீக்கிரம் என் நாட கண்டுபுடிச்சிட முடியுமா????சவால் விடும் நித்தி:

நான் இறந்துவிட்டால் எனது உடல் பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தான். அடக்கம் செய்ய வேண்டும் இதுவே எனது கடைசி ஆசை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு வீடியோவில் அவர் பேசியுள்ளது அவரின் முரட்டு பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது ? அமைச்சர் செங்கோட்டையன் பதில் 

News Editor

திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் பூமிநாதன் வெட்டி கொலை

News Editor

தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று :

Shobika