தமிழகம்

தமிழகத்துக்கு ரெட் அலர்ட் – இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் நாளை (நவ.10) மற்றும் நாளை (நவ.11) மறுநாள் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

24, 25 தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் “ரெட் அலர்ட்” | E Tamil News

தென் கிழக்கு வங்கக் கடலில் இன்னும் 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நவம்பர் 11 ஆம் தேதி காலை வட தமிழகத்துக்கு வந்தடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும், அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்பதால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் 20 முதல் 25 செ.மீ மேல் மழைப் பதிவு ஆகக்கூடும்.

ALSO READ  செம்பரம்பாக்கம் ஏரி 20 அடியை தாண்டியது...தீவிர கண்காணிப்பு...

இந்நிலையில், வங்கக் கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 11-ம் தேதி அதிகாலை வட தமிழக கடலோரப் பகுதியில் கரையை கடக்கக்கூடும்.

இதன் காரணமாக நாளையும் நாளை மறுதினமும் கடலோர மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் 11 ஆம் தேதிக்குப் பின்னர் மழை படிப்படியாகக் குறையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை, 10-ஆம் தேதி,

ALSO READ  உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த நபரால் பரபரப்பு..

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கும் புதுச்சேரிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

11-ஆம் தேதி கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தனது நற்செயலால் மக்களின் கவனத்தை ஈர்த்த பிச்சைக்காரர்:

naveen santhakumar

என்னை விலகியிருக்கும் படி யாரும் நிர்பந்திக்க முடியாது.- சசிகலா

News Editor

கட்டுப்பாடுகளை மதிக்காத பொதுமக்கள்; இ-பதிவில் திருமணத்தை தூக்கிய தமிழக அரசு !

News Editor