தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை. மேலும் கொரோனா தொற்றுக்கு பொதுமக்கள் முதல் முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள் வரை கொரோனா பாதிப்பால் இறந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், இதுவரை கொரோனா பாணியில் ஈடுபட்ட 43 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு ரூ.30 ஆயிரம், செவிலியர்களுக்கு ரூ.20 ஆயிரம், இதர பணியாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த ஊக்கத்தொகை ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் என கூறியுள்ளார்.