இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகளவில் பரவி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் இந்நோய்க்கு, 468 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 4,041பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் அதிகரித்து வந்த கொரோனா தொற்று ஒரு சில தினங்களாக குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.