தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை தரமணியில் உள்ள சென்னை பல்கலைக்கழக மாணவர் விடுதியை மாநகராட்சி சார்பில் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இதனை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,உங்களுக்கு உடலில் ஏதாவது அறிகுறி இருந்தால் உடனடியாக கணக்கெடுக்க வருபவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.கொரோனாவை பொறுத்தவரை இறப்புகளை முழுமையாக தடுப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளோம்.பணிக்கு செல்பவர்களுக்கு அறிகுறி இருந்தால் சென்னை மாநகராட்சி சார்பில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம்.
நோய் அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். சென்னையில் 30 இடங்களில் மாநகராட்சி கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.