சென்னை புதுமைப்பெண் திட்ட துவக்க விழாவில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றிய போது புதுமைப் பெண் திட்டம் உள்பட கல்வித்துறையில் பல புதிய முன்னெடுப்புகளை எடுத்துவரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் எனக் கூறி புகழ்ந்தார்.
சென்னையில் புதுமைப்பெண் திட்ட துவக்க விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசிய போது, தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு வந்து பள்ளிகள், மருத்துவமனைகளை பார்வையிட்டு, அதேபோல் தமிழ்நாட்டிலும் அமைப்பேன் என்று சொல்லி, அதை இப்போது அமைத்தும் காட்டியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஒரு மாநில முதலமைச்சர் இன்னொரு மாநிலத்திற்கு சென்று பள்ளிகள், மருத்துவமனைகளை பார்வையிடுவதை இதுவரை கண்டதில்லை என்று கூறினார். மேலும் புதுமைப் பெண் திட்டம் உள்பட கல்வித்துறையில் பல புதிய முன்னெடுப்புகளை எடுத்துவரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என்றும் இந்தியாவுக்கே வழிகாட்டும் புரட்சிகரமான திட்டம் தான் புதுமைப் பெண் திட்டம்.
திறமை இருந்தும், வறுமை காரணமாக மாணவியர் படிப்பைக் கைவிடும் சூழல் உள்ளதாகவும் புதுமைப்பெண் திட்டம் இந்த இடைநிற்றலை தவிர்க்கும் புரட்சிகரமான திட்டம் என்றும் இந்தியா முழுவதும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். டெல்லி, தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் தவிர நாடு முழுவதும் பெரும்பாலான அரசுப்பள்ளிகளின் நிலை கவலைக்குரியதாக உள்ளது எனவும் அரசுப்பள்ளிகளை மேம்படுத்தா விட்டால், தேசத்தின் வளர்ச்சி கேள்விக்குறியே.. இவ்வாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.