இன்றைய சூழ்நிலையில் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் ஒருவருக்கொருவர் குறைந்தவர்கள் இல்லை என்று தான் கூற வேண்டும்.ஆன்லைன் மூலம் பல நன்மைகள் இருந்தாலும், பெண்களுக்கு பல நேரங்களில் எளிதில் ஆபத்துகள் நேர்ந்துவிடுகிறது.அதே போல் மதுரையை சேர்ந்த சிறுமிஆன்லையன் நண்பர் மூலம் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மதுரையை சேர்ந்த அல்ஹசன் என்ற 19 வயது இளைஞர், இன்ஸ்டாகிராமில் 11ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அறிமுகமாகி அவரை காதலித்து வந்துள்ளார்.பின்பு இருவரும் ஆன்லைனில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்துள்ளனர்.அதோடு மாணவி தனது அந்தரங்க புகைப்படத்தையும் அந்த இளைஞருக்கு பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து விடுவேன் என மிரட்டி, சிறுமியை ஒரு நாள் அவனுடன் தங்கும்படி அழைத்துள்ளான்.
ஆனால் அந்த சிறுமி கர்பமானாதால் இந்த விஷயம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.உடனே காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்ததன் மூலமாக அந்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.