கரூரில் தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி, பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் வரும் 10-ம் தேதி நடத்தப்படவுள்ள மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமைச் சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.
அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் தடுப்பூசி செய்து கொள்வோருக்கு குலுக்கல் முறையில் வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி, குக்கர் ஆகிய பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாத நபர்களை தடுப்பு முகாமுக்கு அழைத்து வந்தாலும் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என கரூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 18 வயது பூர்த்தி அடைந்த இருந்தால் கண்டிப்பாக தடை செய்து கொள்ளவேண்டும் என்றும், அதே போல் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துபவர்கள் சரியான நேரத்தில் தடுப்பூசி செய்து கொள்ள வேண்டும் என்றும் கரூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.