தமிழகம்

மிஸ் யூ ஆல்: கரூர் பள்ளி மாணவி தற்கொலை – திடீர் திருப்பம்: கணித ஆசிரியர் தற்கொலை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாலியல் துன்புறுத்தலால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கரூரில் பாலியல் துன்புறுத்தலால் உயிரிழக்கும் கடைசி பெண் நானாக இருக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

ALSO READ  தமிழகத்தில் நிறைய கல்லூரிகள் அமைக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு
மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. அதே பள்ளி ஆசிரியர் தற்கொலை..  கடிதத்தில் குறிப்பிட்டவர் இவர்தானா? |

இந்நிலையில், மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன். கணித ஆசிரியர் சரவணனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ലൈംഗിക പീഡനത്തെ തുടര്‍ന്ന് വിദ്യാര്‍ഥിനി ജീവനൊടുക്കി; ആറാംദിവസം അധ്യാപകനും  ആത്മഹത്യചെയ്ത നിലയില്‍ | tamilnadu school teacher suicide| school student  rape| teacher ...

தற்கொலை செய்யும் முன்பு சரவணன் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில்,

கரூர் பாலியல் வழக்கில் ஆசிரியர் தற்கொலை ! - newscrowns

தனது குடும்பத்தில் உள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டு எழுதியுள்ளார். “எனக்கும் மாணவியின் தற்கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் மாணவர்கள் என்னை தவறாக நினைக்கிறார்கள், நான் எந்த தவறும் செய்யவில்லை, ஏன் இப்படி கூறுகிறார்கள். மாணவர்கள் என்னை தவறாக நினைப்பதால் அவமானமாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

ALSO READ  10,000 கோடி- நாளை கையெழுத்தாகும் 33 ஒப்பந்தங்கள்

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மதுரை கள்ளழகருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மாலை !

News Editor

தஞ்சை மாணவி தற்கொலையில் திடீர் திருப்பம்… மாவட்ட எஸ்.பி. பகிரங்க எச்சரிக்கை!

naveen santhakumar

7 ஸ்டார் ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு – பலர் மருத்துவமனையில் அனுமதி

News Editor