சென்னை:
நவம்பர் 1ம் தேதி முதல் மழலையர், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள் திறக்கப்படாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கடந்த செப்.1 முதல் 9-12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கி நடந்து வருகிறது. மேலும் நவம்பர்1 முதல் எல்.கே.ஜி. – யு.கே.ஜி. போன்ற நர்சரி பள்ளிகளையும் மழலையர் பள்ளிகளையும் திறந்து நேரடி வகுப்புகளை நடத்த அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.
நவம்பர் 1- முதல் 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை நடத்தவும் அரசு அனுமதி அளித்துள்ளது. அதுபோன்று பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் நடைமுறை படுத்த வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நவம்பர் 1ம் தேதி முதல் மழலையர், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள் திறக்கப்படாது என்றும் மழலையர், நர்சரி பள்ளிகளை திறப்பு குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.