தமிழகம்

3 மாத குழந்தையை பிறப்புறுப்பை அறுத்து கொன்ற சைக்கோ பாட்டி – அதிர்ச்சி சம்பவம்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கோவை அருகே 3 மாத ஆண் குழந்தையை கொடுரமாக கொலை செய்த சைக்கோ பாட்டிக்கு போலீஸ் தீவிரமாக தேடி வருகின்றனர்.

santhi

கோவை அருகே கவுண்டபாளையம் சேரன் நகர் பகுதியில் வசித்து வரும் தம்பதி பாஸ்கரன் – ஐஸ்வர்யா. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது.

இரட்டைக் குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக ஐஸ்வர்யாவின் தாய் சாந்தி இவர்களுடன் தங்கியிருந்துள்ளார்.

grandmother killed her daughter baby in kovai

இந்நிலையில், நேற்று இரவு ஐஸ்வர்யா குழந்தைகளை தாயாரிடம் குழந்தைகளை விட்டுவிட்டு கடைக்கு சென்றுள்ளார். வீடு திரும்பிய ஐஸ்வர்யாவிடம் குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டதாக சாந்தி கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா, வீட்டிற்குள் தேடிய போது ஆண் குழந்தை படுக்கையில் பிறப்புறுப்பில் காயங்களுடன் கிடந்துள்ளது. பெண் குழந்தை கழிவறையில் இருந்துள்ளது. இந்த களேபரங்களுக்கு இடையே சாந்தி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

ALSO READ  நாகை எம்.பி. செல்வராஜுக்கு கொரோனா...

இரண்டு குழந்தைகளையும் ஐஸ்வர்யாவும் அவரது கணவரும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் ஆண் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாட்டி தாக்கியதில் கடுமையாக காயமடைந்த பெண் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். விசாரணையில், சாந்தி ஆண் குழந்தையை பிறப்புறுப்பை அறுத்துக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் பேத்தியையும் கொடூரமாக தாக்கிவிட்டு தப்பி ஓடியது கண்டுபிடிக்கப்பட்டது.

ALSO READ  பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி- தமிழக அரசு..

இது தொடர்பாக குழந்தைகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சிளம் குழந்தைகளை கொடூரமாக கொன்ற சைக்கோ சாந்தி 15 ஆண்டுகளாக மனரீதியாக பாதிப்புடன் இருந்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2021-ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் பட்டியல் வெளியீடு : அம்பேத்கர் சுடர் விருது – மு.க.ஸ்டாலின் பெரியார் ஒளி விருது – வைகோ பெறுகின்றார்கள்

News Editor

தடுப்பூசி போட்டாலும் டெல்டா வைரஸ் தாக்கும் : ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல் !!

naveen santhakumar

மெகா தடுப்பூசி முகாம் – தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

News Editor