தமிழகம்

தனது பிஞ்சு குழந்தையை தாக்கிய கொடூர பெண் கைது- ஆண் நபர் தப்பி ஓட்டம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

செஞ்சி அருகே மணலப்பாடி மதுரா மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன் (வயது 37) இவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த துளசி (22) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கோகுல் (4), பிரதீப் (2) ஆகிய மகன்கள் உள்ளனர்.

குழந்தையை கொடூரமாக தாக்கியது ஏன்..?; தாய் துளசி 'பகீர்' வாக்குமூலம்..!

கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே துளசி தனது தாய் வீட்டில் 2-வது மகன் பிரதீப்புடன் இருந்து வருகிறார்.

இந்நிலையில், துளசி தனது மகன் பிரதீப்பை சரமாரியாக தாக்கி அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.

ALSO READ  விபரீதத்தில் முடிந்த விளையாட்டு - கேக் ஊட்டி கொன்ற நண்பர்கள்

இதனிடையே, துளசியின் கணவர் வடிவழகன் அளித்த புகாரின் அடிப்படையில் துளசி மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராம்பள்ளி கிராமத்திற்கு சென்று துளசியை இன்று கைது செய்துள்ளனர்.

குழந்தையை அடித்து கொடுமைப்படுத்திய வீடியோ: தாய் கைது

துளசியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், துளசி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் ஆண் நண்பர் பிரேம்குமார் என்பவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் குழந்தையை தாக்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் பிரேம் குமாரை பிடிப்பதற்காக சென்னை விரைந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளின் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்..

Shanthi

தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் கவர்னருடன் சந்திப்பு

News Editor

ஆற்றில் மூழ்கி மூவர் உயிரிழப்பு:

naveen santhakumar