தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:
நிவர் புயல் புதுச்சேரி-மாமல்லபுரம் இடையே கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் இன்று நள்ளிரவு 2 மணியளவில் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. தற்போது புதுச்சேரி மாமல்லபுரம் இடையே கரையை கடக்க இருப்பதாக தெரிவித்து உள்ளது.
மேலும் நிவர் புயலின் வேகம் 13 கி.மீ- 14கி.மீ ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரையில் நிவர் புயல் எங்கு கரையை கடக்கும்??? என துல்லியமாக கணிக்க இயலவில்லை எனவும் அது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தற்போது கடலூர் அருகே 80 கி.மீ தொலைவில் மையம் கெண்டுள்ளதாகவும் புதுச்சேரியில்இருந்து 85 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 160 கி.மீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.