தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
திருவள்ளூர்:-
மாதவரம் ஆவின் பால்பண்ணையில் தொழிலாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உள்ளது சோதனையில் உறுதியாகியுள்ளது.
சென்னை மாதவரம் ஆவின் பால்பண்ணை மூலம் ஒரு நாளைக்கு 2 லட்சத்து 38 ஆயிரம் பால் பாக்கெட்டுகள் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இங்கிருந்து சென்னை மாநகரம், வெளி மாவட்டங்களுக்கும் பால் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் மாதவரம் ஆவின் பால்பண்ணையில் பணிபுரியும் தொழிலாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் கொரோனா தொற்று ஏற்படுமோ என்ற பயத்தில் உள்ள ஊழியர்கள் பணிக்கு வர மறுப்பதால் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல நந்தனம் ஆவின் தலைமையகத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.