தமிழகம்

வன்னியர் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து – மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

எம்.பி.சி பிரிவில் வன்னியர்களுக்கான 10.5% சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து – ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி! -  AanthaiReporter.Com | Tamil Multimedia News Web

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய முந்தைய அதிமுக அரசு சட்டம் நிறைவேற்றியது.

இந்த சட்டத்தை எதிர்த்து எழுத்து 25-க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர். முறையாக சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தங்கள் மனுவில் தெரிவித்து இருந்தனர்.

ALSO READ  விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி:
Breaking: வன்னியர் இட ஒதுக்கீடு அரசாணை.. முதல்வர், முன்னாள் முதல்வர்,  முன்னாள் அமைச்சருக்கு டாக்டர் இராமதாஸ் நன்றி..! - Seithipunal

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்ற மதுரை கிளை வன்னியர் சமூகத்தினருக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்து நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் தீர்ப்பளித்தனர்.

இதைத்தொடர்ந்து, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்தான நிலையில் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

ALSO READ  9,10,11,12 வகுப்புகள் தொடங்க தயார் நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை
வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் முக ஸ்டாலின் செய்த கேவலமான வேலை.,  கொந்தளிப்பில் நெட்டிசன்கள்.! - Seithipunal

இந்த சட்டத்திற்கு பிறகு 10.5% இட ஒதுக்கீடு வன்னியர்கள் பிரிவில் வரும் 7 உட்பிரினருக்கு, (வன்னியர், வன்னியா, வன்னிய கவுண்டர், படையாச்சி , பள்ளி, அக்னிகுல சத்திரியர்கள்) வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மொத்த வியாபாரிகளிடம் 1 கோடி ரூபாய் மோசடி செய்த தம்பதியினர் !

News Editor

தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்

News Editor

மோடி – சீன அதிபரை வரவேற்று தமிழக அரசு சார்பில் பேனர் வைக்கலாம்

Admin